கருணையின் உருவே இறைவா கரையிலா அருள்நிறை தலைவா
கனிமொழி பேசிடும் முதல்வா
எம் கனவுகள் மெய்ப்பட வருவாய் - 2
1. பகைமையும் வெறுப்பும் அழிந்திடணும்
பகிர்வதில் மனங்கள் மகிழ்ந்திடணும்
நீதியும் நேர்மையும் நிலைத்திடணும்
நிம்மதி வாழ்வில் நிறைந்திடணும்
இதயங்களில் இரக்கம் வேண்டும் இன்னல்களில் உதவ வேண்டும்
உறவுகளில் உண்மை வேண்டும் வேற்றுமைகள் மறையணும்
இந்த உலகில் உந்தன் ஆட்சி உருவானால் பேரின்பம் - 2
2. வறுமையும் பிணிகளும் ஒழிந்திடணும்
வளமையும் வாழ்வும் பெருகிடணும்
தீமையின் வேர்கள் அழிந்திடணும்
நன்மையின் பாதைகள் தெரிந்திடணும்
போர்களில்லா பூமி வேண்டும் புவியினிலே அமைதி வேண்டும்
ஆயுதங்கள் அழிய வேண்டும் அன்புலகம் மலரணும் இந்த.....
Browse » Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment