Browse » Home
Thursday, April 4, 2013
தியாகப் பலியினிலே இறைவன் எழுகின்றார்
தியாகப் பலியினிலே இறைவன் எழுகின்றார்
பகிரும் உள்ளங்கள் நடுவிலே பரமன் வருகின்றார் - 2
வருகின்றார் வருகின்றார் அருளை நம்மில் பொழிகின்றார் - 2
1. உறவில் நாளும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்
உண்மை வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார் - 2
கண்ணின் மணிபோல் என்னைக் காக்கும் பரமன் வருகின்றார் - 2
கனிவாய் உன்னை நாளும் தேற்றும் பரமன் வருகின்றார் - வரு...
2. அன்பில் என்றும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்
அமைதி வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார் - 2
உடனிருந்து உயிரை வழங்கும் பரமன் வருகின்றார் - 2
தன்னை தந்து நம்மை மீட்கும் பரமன் வருகின்றார் - வரு...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment