தாய் போல எனைக் காக்கும் என் தெய்வமே - உன்
துணையின்றி என் வாழ்வு வீணாகுமே - 2
நீயில்லையேல் நானில்லையே - 2 - உன்
உறவில்லையேல் வாழ்வில்லையே
1. தாய் என்னை மறந்தாலும் நீ என்னைப் பிரியாமல்
உறவாலே என் வாழ்வை மகிழ்வாக்கினாய் ம்... ஆ... - 2
அன்பானவா அருளானவா - 2
துயர் நீக்கி துணையாக நீர் வாருமே - 2
2. உறவெல்லாம் வெறுத்தாலும் பரிதவித்து தவித்தாலும்
உன் கண்ணில் எனை வைத்து நீ காக்கின்றாய் ம்... ஆ... - 2
ஒளியானவா உயிரானவா - 2
உன் அன்பு நிலையாகும் வரம் வேண்டுமே - 2
Browse » Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment