Saturday, April 6, 2013

பாமாலை பாடிடுவோம் | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
 நல்லகாலம் பொறந்திருச்சு, நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொரந்திருச்சு, நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2)

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே
உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2)

இயேசு சாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே

இறையரசின் தூதுவரே சவேரியாரே ...(2)

இஞ்யாசியார் கண்டெடுத்த இயேசுசபை மாமுனியே ...(2)
இறைவன் தந்த அருட்கொடையே சவேரியாரே ...(2)

வாழியவே! வாழியவே! சவேரியாரே
எங்கள் விசுவாச நாயகரே சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே
உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே

தென்னாட்டு பகுதியிலே கடலோர ஊர்களிலே

நற்செய்தி போதித்த சவேரியாரே ...(2)

நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் ...(2)
ஞ்யானஸ்நானம் வழங்கிய சவேரியாரே ...(2)

வாழியவே! வாழியவே! சவேரியாரே
எங்கள் விசுவாச நாயகரே சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே


கட்டுமர ஓடத்தில கடல்மீது போகயில

கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே ...(2)

அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே ...(2)
நல்லாசி தந்திடுமே சவேரியாரே ...(2)

வாழியவே! வாழியவே! சவேரியாரே
எங்கள் விசுவாச நாயகரே சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே ...(2)

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே
உமக்கு கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே ...(2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே

Read more ►

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்! 

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)

உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

உலகினில் என்றும் நிலையான செல்வம்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)

வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)

Read more ►

உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன் | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன் 
உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே - 2 
உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2

1. உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே 
வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே - 2 
அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா 
ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா 
உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா 
அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

2. துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே 
துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே - 2 
இறைவனே இயேசுவே இதயம் எழுந்து வா 
நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின்...
Read more ►

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே

தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2) வாருங்கள் … …
Read more ►

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு ஏசுவாம்
நாம் நம்மையே பலியாய் கொடுப்போம்
இந்த பாரினில் அவராய் வாழ்வோம்

இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை போன்றொரு உயரிய இலட்சியம் எதிலுமே வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைபெறுமே (2)
இதை உணர்வோம்; நம்மை பகிர்வோம் (2)
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே


பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
ஏசுவின் பலியில் இறப்பும் உயிர்ப்பும் இனையற்ற சாட்சிகளே(2)
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் (2)
நாளைய உலகின் விடியலாகவே
Read more ►

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன்

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் (2)
என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2
எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று
சுவைத்துப்பாருங்கள் -2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று
Read more ►

உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை ...(2)

அழியும் செல்வம் சேர்ப்பதா! அழியா ஆன்மாவை காப்பதா! ...(2)
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்!
அவரே புனித சவேரியார்!

உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை

பொன்னும் பொருளும் தேடுகிறோம்! பட்டம் பதவியை நாடுகிறோம்! ...(2)
எதுவும் நிறைவு தருவதில்லை! எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை!
|முடிவில்லாதது ஒன்றே தான்! அழிவில்லாத ஆன்மா தான்!| ...(2)

உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை

அறிவும் திறனும் அமைவதில்லை! உறவும் நட்பும் தொடர்வதில்லை! ...(2)
தேடும் எதுவும் கிடைப்பதில்லை! கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை!
|முடிவில்லாதது ஒன்றே தான்! அழிவில்லாத ஆன்மா தான்!| ...(2)

உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை

அழியும் செல்வம் சேர்ப்பதா! அழியா ஆன்மாவை காப்பதா! ...(2)
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்!
அவரே புனித சவேரியார்!

உலகமெல்லாம் எனக்காதயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை
Read more ►

அல்லேலூயா கர்த்தரையே | Alleluiah Kartharaiye | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
அல்லேலூயா கர்த்தரையே

1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் 
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

பல்லவி

இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் 
பூமியில் ஆட்சி செய்வார் 
அல்லேலுயா அல்லேலுயா
தேவனைத் துதியுங்கள்

2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் 
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள் 
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள் 
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள் 
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

Read more ►

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைப் | Potri thuthipom em deva devanai | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
1.போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைப்

புதிய இதயமுடனே

நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித் துதிப்போம்

இயேசு என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான்
என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

 2.கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு மார்பில்
சேர்த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன்

 3.யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

 4.தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னை அவர் கையில் தந்து
ஜீவபாதை என்றும் ஓடுவேன்

 5.பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
தந்து தொண்டு செய்குவேன்
Read more ►

தேவ கிருபை என்றுமுள்ளதே | Deva kirubai entrum ullathe | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube

தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே 

அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

1. நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல் 

    கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே 
    அவர் நல்லவர் அவர் வல்லவர் 
    அவர் கிருபை என்றுமுள்ளதே

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் 

    பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு 
    முன் சென்றாரே அவர் நல்லவர் 
    அவர் கிருபை என்றுமுள்ளதே

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் 

    முட்செடி தன்னில் தோன்றிய தேவன் 
    பாது காத்தாரே அவர் நல்லவர் 
    அவர் கிருபை என்றுமுள்ளதே

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் 

    பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் 
    என்னை நடத்தினார் அவர் நல்லவர் 
    அவர் கிருபை என்றுமுள்ளதே

5. வெள்ளம்போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் 

    வீரன் நெகேமியா ஆவியை அளித்தே 
    திட நம்பிக்கை தைரியமும் ஈந்தாரே 
    அவர் கிருபை என்றுமுள்ளது

6. நித்திய தேவனாம் சத்தியபரன் தான் 

    நித்தமும் நம்முடன் இருப்பதாலே 
    அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் 
    அவர் கிருபை என்றுமுள்ளதே
Read more ►

Nam Devan Anbullavar | நம் தேவன் அன்புள்ளவர் | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே

1.நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ..அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்

2.அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ..அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே

3.வான மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ ... எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே

4.அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ..அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே
Read more ►

Itho manusarin maththiyil | இதோ மனுஷரின் மத்தியில் | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube
பல்லவி

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !

சரணங்கள்

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! --- இதோ

2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! --- இதோ

3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! --- இதோ

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! --- இதோ

5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் --- இதோ
Read more ►

Yesuvin Naamam Inithaana Naamam | இயேசுவின் நாமம் இனிதான நாமம் | Tamil christian songs

0 comments

Subscribe to me on YouTube

இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்

சரணங்கள்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் --- இயேசுவின்

2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் --- இயேசுவின்

3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் --- இயேசுவின்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் --- இயேசுவின்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் --- இயேசுவின்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் --- இயேசுவின்
Read more ►

Friday, April 5, 2013

உம் நாமம் சொல்ல சொல்ல-Um Naamam Solla Solla

0 comments

Subscribe to me on YouTube
உம் நாமம் சொல்ல சொல்ல

பல்லவி

உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

சரணங்கள்

1. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமா
உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா --- உம் நாமம்

2. பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன் --- உம் நாமம்

3. முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன் 
மொழியென்பேன் மொழியென்பேன், வற்றாத ஊற்றென்பேன்
வாழ்க உம் நாமம் என்பேன் --- உம் நாமம்
Read more ►

Thursday, April 4, 2013

neer mathram pothum-நீர் மாத்ரம் போதும்

0 comments

Subscribe to me on YouTube

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்திலே
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
இயெசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு



Read more ►

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே-Thikkatra pillaikalukku

0 comments

Subscribe to me on YouTube

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
   தூரத்தில் நின்றுவிடுவீரோ
   பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
   இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
2. கர்த்தாவே எழுந்தருளும்
   கைதூக்கி என்னை நிறுத்தும்
   தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
   தூயவரே இரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2
3.தாயென்னை மறந்தாலும்
  நீர் என்னை மறப்பதில்லை
  ஏழையின் ஜெபம் கேளும் – 2
  இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2


Read more ►

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்-Tamil christmas song

0 comments

Subscribe to me on YouTube
 பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் .....
விண்ணவர் வாழ்த்திட (2)
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே ...
ராஜன் பிறந்தார் (2) , நேசர் பிறந்தாரே (2)....


மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே … (2)
முன்வழி கட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே …
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை ( பனி )


மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே ... (2)
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதிதவரே …
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை ( பனி )
Read more ►

charanam nampinen yeasu naatha-சரணம் நம்பினேன் இயேசு நாதா

0 comments
   
Subscribe to me on YouTube
சரணம் நம்பினேன் இயேசு நாதா.......(3)

ஆ இது தருணம் தருணம்
உந்தன் கருணை துணை தான் -சரணம்

நின் அருளால் இங்கே வந்து
என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)
உன்னால் வினையை துறந்து (2)
ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2)-சரணம்

அலைபாய தொடர்ந்து போராடி
உமது தடி கருணை வர செம்பாத தேடி (2)
தொலையாத வாழ்வை மன்றாடி (2)
அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி -சரணம்

இனிய கருணை பொழி வேதா
எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (2)
பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா
உன் கருணையை தா தா - சரணம்
Read more ►

enakkai jeevan vittavare,எனக்காய் ஜீவன் விட்டவரே

0 comments

Subscribe to me on YouTube

1. எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே

பல்லவி

இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே

2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே --- இயேசு

3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் --- இயேசு

4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் --- இயேசு
Read more ►

nadaka solli thaarum-நடக்க சொல்லி தாரும் இயேசுவே

0 comments

Subscribe to me on YouTube
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே(2)
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்(2)

 இருள் நிறைந்த உலகமிது
துன்பம் என்னை நெருக்குதே(2)
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே(2)

 அடம்பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்(2)
கரம்பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே..(2)
Read more ►

jebathai ketkum engal deva-ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா

1 comments

ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் .
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காண செய்யும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

ஊக்கத்துடனே ஒர்முகமாய்
வாக்குதத்தை பற்றிக்கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மை ஆக்கி
கேக்கும்படி கிருபை செய்யும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகனதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடு வேண்டி கொள்ளும்.

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கி விடும்.
சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
Read more ►

andavare en andavare ஆண்டவரே என் ஆண்டவரே

0 comments
ஆண்டவரே என் ஆண்டவரே நீர் என்னைக் கைவிடமாட்டீர்
துன்ப துயரங்கள் எனைத் தொடர்ந்தாலும்
துணைகள் இன்றியே நான் துவண்டாலும்
நீர் என்னைக் கைவிடமாட்டீர்
ஆண்டவரே என் ஆண்டவரே நீர் என்னைக் கைவிடமாட்டீர் -- 2

இன்னலுற்ற வேளையிலும் இதயம் உடைந்த பொழுதினில்
கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்
இடையன் இல்லா ஆட்டைப்போல் இலக்கின்றி அலைந்தாலும்
இரக்கம் மறந்தும்மை நான் உதறிச் சென்றாலும்
இறவா இறைவன் உன் இதயநிழலில் வாழுவேன்
இதயமாய் உன் கரத்தை இறுகப் பற்றிக் கொள்ளுவேன் -- 2

ஆண்டவரே ஆண்டவரே ஆண்டவரே என் ஆண்டவரே
தோல்வி தொடர்ந்த வேளையில் சோர்ந்து நொந்த பொழுதினில்
உலகம் பழிக்கும் நேரத்தில் உறவும் இகழும் காலத்தில்
உயிரைத் தந்த உம்மை நான் மறந்து போனாலும்
குறையா உன் ஆற்றல் கண்டு வியந்து பாடுவேன்
நிறைவாய் உன் அன்பில் நிலைத்து என்றும் மகிழுவேன் -- 2
Read more ►

Enthan jeba velai-எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

0 comments
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -[2] -எந்தன்

சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] -எந்தன்

உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -[2] -எந்தன்
Read more ►

en uyirana uyirana uyirana yesu-என் உயிரான உயிரான உயிரான இயேசு

0 comments

என் உயிரான உயிரான உயிரான இயேசு -- 2
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் -- 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே -- என் உயிரான

உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன் -- என் உயிரான

உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே -- என் உயிரான
Read more ►

Aiya Nan Vanthen-ஐயையா நான் வந்தேன்

3 comments
பல்லவி

ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

சரணங்கள்

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா


உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா


எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ !-இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
தேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
தென்னை அரவணையும் ;-மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா

மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே ,-இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா
Read more ►

அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே

0 comments

அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அம்மா உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல்
உன் திருக்கொடிதான் வானில் எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா
திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா
ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா - 2
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா

1. தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்
தாயே உந்தன் நிழல் தேடி - 2
அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை
அண்டியே வந்தவர்கள் பல கோடி - 2
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா - 2
அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா - 2

2. ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே - 2 - அம்மா
அருள்மழை பொழிந்திட தெரிந்தவளே
ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி - 2
வேளைமாநகர் வாழ் மரியே வாழி - 2
Read more ►

Kelungal tharapadum-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

0 comments


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 )


பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா....
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......)


ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பத்தாரையும் ஐயம் தீர உணர்ந்தார்.
இயற்க்கை உலகமே தூய்மையானது என
இயேசு நினைத்தாரே....
எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...)


ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே ( 2 )
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே....
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே...( 2 )
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே......
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -( கேளுங்கள்..(2))


தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 )
நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உளுங்கள் என்று
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்.....

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார்
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்..
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே......

துன்பத்தை அகற் இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே ( 2 )
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தனே
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே
ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே ( 2 )
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே (கேளுங்கள்.......)
Read more ►

Sahaya Thayin Sithiram nokku,சகாயத்தாயின் சித்திரம் நோக்கு

0 comments
சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு
எத்துணைக் கனிவு எத்துனைத் தெளிவு
வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு

1. குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்
கொடூர சிலுவையும் கண்டு மிரண்டு - 2
தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை
சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ - 2

2. அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் - 2
இம்மாநிலத்தில் இவள் போல் - 2
இரங்கும் தாயும் உளரோ - 2
Read more ►

Pethalayil piranthavarai Poartri thuthi manamay-பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

0 comments
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்தலையில்

2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்தலையில்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்தலையில்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்தலையில்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - பெத்தலையில்

Pethalayil piranthavarai
Poartri thuthi manamay - innum

1.Saruvaththayum padaithaanda saruva vallavar -ingu
Thaalmayulla thaai madiyil thalai saaykalaanaar - Pethalayil

2.Singaasanam veetirukkum theva mainthanaar -ingu
Pangamutta pasu thoddilil paduthirukkiraar- Pethalayil

3.Munpu avar sonnapadi mudipatharkaaga -ingu
Moatcham viddu thaalchiyulla munnanaiyile -Pethalayil

4.Aavikalin poattuthalaal aananthang kondoor - ingu
Aakkalooda saththathukkul aluthu piranthaar -Pethalayil

5.Ethadaivaai anbu vaitha emperumaanai - naam
Ennamudan poai thuthikka yeagiduvomay- Pethalayil
Read more ►

Nantriyaal Paadiduvoom-நன்றியால் பாடிடுவோம்

0 comments

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1.செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய்

2.உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க

3.ஜீவனைத் தியாகமாய் வைத்தப் பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்

4.மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்துருக்களாயினாரே
சத்தியத்தைச் சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம்

5.அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க் களிப்பீர்

6.சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் ராஜனையே

Read more ►

பலியிட வருகின்றேன் என்னை பலியென தருகின்றேன்

0 comments



பலியிட வருகின்றேன் என்னை பலியென தருகின்றேன்
சிந்தனை சொல் செயல் உனக்காக
சிந்தும் நல் வியர்வையும் உனக்காக (2)
மகிழ்வுடன் தருகின்றேன்
இயற்கை தந்த நலன்கள் இறை நீ தந்த வளங்கள்
மண்ணில் விளைந்த மணிகள் மனிதம் நாடும் மனங்கள்
மகிழ்வுடன் உன்பதம் படைக்கின்றேன்
மனம்நிறை பலியென ஏற்றிடுவாய்
வாழ்வில் மகிழும் கணங்கள் தாழ்ந்து வருந்தும் தருணம்
உழைப்பில் உயரும் உணர்வும்
உலகை உயர்த்தும் பணியும் – மகிழ்வுடன்
Read more ►

தியாகப் பலியினிலே இறைவன் எழுகின்றார்

0 comments


தியாகப் பலியினிலே இறைவன் எழுகின்றார்
பகிரும் உள்ளங்கள் நடுவிலே பரமன் வருகின்றார் - 2
வருகின்றார் வருகின்றார் அருளை நம்மில் பொழிகின்றார் - 2

1. உறவில் நாளும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்
உண்மை வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார் - 2
கண்ணின் மணிபோல் என்னைக் காக்கும் பரமன் வருகின்றார் - 2
கனிவாய் உன்னை நாளும் தேற்றும் பரமன் வருகின்றார் - வரு...

2. அன்பில் என்றும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்
அமைதி வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார் - 2
உடனிருந்து உயிரை வழங்கும் பரமன் வருகின்றார் - 2
தன்னை தந்து நம்மை மீட்கும் பரமன் வருகின்றார் - வரு...
Read more ►

தாய் போல எனைக் காக்கும் என் தெய்வமே

0 comments
தாய் போல எனைக் காக்கும் என் தெய்வமே - உன்
துணையின்றி என் வாழ்வு வீணாகுமே - 2
நீயில்லையேல் நானில்லையே - 2 - உன்
உறவில்லையேல் வாழ்வில்லையே

1. தாய் என்னை மறந்தாலும் நீ என்னைப் பிரியாமல்
உறவாலே என் வாழ்வை மகிழ்வாக்கினாய் ம்... ஆ... - 2
அன்பானவா அருளானவா - 2
துயர் நீக்கி துணையாக நீர் வாருமே - 2

2. உறவெல்லாம் வெறுத்தாலும் பரிதவித்து தவித்தாலும்
உன் கண்ணில் எனை வைத்து நீ காக்கின்றாய் ம்... ஆ... - 2
ஒளியானவா உயிரானவா - 2
உன் அன்பு நிலையாகும் வரம் வேண்டுமே - 2
Read more ►

குறையாத அன்பு கடல் போல வந்து

0 comments
குறையாத அன்பு கடல் போல வந்து 
நிறைவாக என்னில் அலைமோதுதே - அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே - 2

1. கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் - 2
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ.... நான் - 2

 2. அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே - 2
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே - 2

 3. இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் - 2
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ... நான் - 2
Read more ►

Karunaiyin uruve iraiva-கருணையின் உருவே இறைவா கரையிலா அருள்நிறை தலைவா

0 comments
 கருணையின் உருவே இறைவா கரையிலா அருள்நிறை தலைவா
கனிமொழி பேசிடும் முதல்வா
எம் கனவுகள் மெய்ப்பட வருவாய் - 2

1. பகைமையும் வெறுப்பும் அழிந்திடணும்
பகிர்வதில் மனங்கள் மகிழ்ந்திடணும்
நீதியும் நேர்மையும் நிலைத்திடணும்
நிம்மதி வாழ்வில் நிறைந்திடணும்
இதயங்களில் இரக்கம் வேண்டும் இன்னல்களில் உதவ வேண்டும்
உறவுகளில் உண்மை வேண்டும் வேற்றுமைகள் மறையணும்
இந்த உலகில் உந்தன் ஆட்சி உருவானால் பேரின்பம் - 2

2. வறுமையும் பிணிகளும் ஒழிந்திடணும்
வளமையும் வாழ்வும் பெருகிடணும்
தீமையின் வேர்கள் அழிந்திடணும்
நன்மையின் பாதைகள் தெரிந்திடணும்
போர்களில்லா பூமி வேண்டும் புவியினிலே அமைதி வேண்டும்
ஆயுதங்கள் அழிய வேண்டும் அன்புலகம் மலரணும் இந்த.....
Read more ►

Yesuvae Um Naamathinaal - இயேசுவே உம் நாமத்தினால்

0 comments
இயேசுவே உம் நாமத்தினால்
இன்பம் உண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம்

மன்னை நாடி பொன்னை அடைந்தோம்
புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்
வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் க‌ரிசனத்தால் ‍- எங்கள் தேவனே

இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பலத்தால் - எங்கள் தேவனே

உன்னைக் கண்டு அழைக்கும்
சத்தத்தை கேட்டாயோ பாவியே
இன்று இயேசுவன்டை வாராயோ
நித்ய ஜீவன் பெற்றிடவே ‍ - எங்கள் தேவனே
Read more ►

சின்ன சிட்டு குருவியே-chinna chittu kuruviye lyrics

0 comments
சின்ன சிட்டு குருவியே சின்ன சிட்டு குருவியே
உன்னை சந்தோஷமா படைச்சது யாரு?
அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமாய் பாடுறியே
உன்ன அழகாகப் படைச்சது யாரு (2)

ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்(2)
உண்ண உணவு கொடுக்கிறார் உறங்க இடமும் கொடுக்கிறார்
இந்த உலகத்தையே படைச்சு இருக்கிறார்(2)

சின்ன சிட்டு குருவியே சின்ன சிட்டு குருவியே
உன் சிறகை எனக்கு தந்திடுவாயா?
உன்னைப் போல பாடிக்கிட்டு உல்லாசமா பறக்கவே
ஒரு உதவி எனக்கு செய்திடுவாயா?

ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவன் கேட்டா கோவிச்சுகுவாரே(2)
எங்கள காக்கிற ஆண்டவர் உங்கள காப்பது இல்லையா
அவர் உங்களத் தானே ரொம்பவும் நேசிக்கிறார்(2)

ஆமா சிட்டுக் குருவியே ஆமா சிட்டுக் குருவியே
அது மனுசங்களுக்கு புரியவில்லையே
உங்கள காக்கிற ஆண்டவர் எங்கள காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரிய‌வில்லையே

லா..லா..லா.. லல லா..லா..லா 
லா...லா...லா... லல லா...லா...லா...
லா..லா..லா.. லல லா..லா..லா
லா...லா...லா... லல லா...லா...லா...
Read more ►
 

Copyright © Tamil Christian Songs Design by O Pregador | Blogger Theme by Blogger Template de luxo | Powered by Blogger